தமிழர் தலைவர் ஆசிரியருடன் பெரியார் பன்னாட்டமைப்பினர் இணையவழி நேர்காணல்

1 Min Read

வாசிங்டன், டிச. 20- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா நடத்திய இணையவழி நேர்காணல் டிசம்பர் 7-ஆம் தேதி சிறப்பாக நடந்தேறியது.

கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் ஆசிரியர் அவர்களை நேர்காணல் செய்தார். ஆசிரியர் அவர்களின் ஆசிரியரான திராவிடமணி அவர்க ளைப் பற்றியும், தந்தை பெரியாரோடு தொடங்கிய பயணத்தையும், கழகப் பணிகளில் அவரது பயணம் தொடங்கிய வரலாறு குறித்தும், பெண்களுக்கான கல்வி அமைப்புகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு புன்னகையுடனும், தெறிப்புடனும் ஆசிரியர் அவர்களின் பதில்கள் அமைந்திருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்ற நேர்காணலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப்பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. டாக்டர் சோம. இளங்கோவன் உள்ளிட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் மற்றும் தோழமைகள் இணைய வழி இணைந்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தனர்.

ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை பெரியார் பன்னாட்டு அமைப்பு வாயிலாக மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *