பிளஸ்2 துணைத் தேர்வு முடிவு நாளை வெளியீடு

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 23 – தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை 24ஆம் தேதி வெளியிடுகிறது. மாணவ, மாணவியர் தங்கள் தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை  https.//voters.eci.gov.in/ என்ற இணையத்தில் பதிவு செய்து மதிப்பெண் பட்டியலுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல், மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந் தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 27 மற்றும் 28ஆம் தேதி களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். 

விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275, மறு கூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *