வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் சார்பாக வல்லம், பேருந்து நிலைய பகுதியில் (Swachh Bharath) ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் என்.சி.சி. கமாண்டிங் ஆபிஸர் மேஜர் எம்.மினி தலைமையில் 23.11.2024 அன்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் என்.சி.சி. அலுவலர்கள், இராணுவ அதிகாரிகள், வல்லம் காவல் ஆய்வாளர் மற்றும் என்.சி.சி மாணவர்கள் 50 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.