என்ன நிர்வாகமோ! விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி காலிப் பணியிடங்கள்

viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ.30 நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், மாநில உயா்நீதிமன்றங்களில் 360-க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களும், உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதி பணியிடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப் பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34. தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட், மற்றொரு நீதிபதியான ஹிமா கோலி ஆகியோர் ஓய்வு பெற்றால் இரு பணியிடங்கள் காலியாக உள்ளன.

நவம்பா் 21-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி பணி யிடங்கள் காலியாக உள்ளன. நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியி டங்களின் எண்ணிக்கை 1,114. இதில் 364 இடங்கள் காலியாக இருக்கின்றன என்றார் அவா்.

ஏஅய்ஜேஎஸ்-கருத்தொற்றுமை இல்லை: துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவா், ‘மாவட்ட நீதிபதி களைத் தோ்வுசெய்ய ‘அகில இந்திய நீதித் துறை பணிகள்’ (ஏஅய்ஜேஎஸ்) நடைமுறையைக் கொண்டுவர அரசமைப்புச் சட்டத்தின் 312-ஆவது பிரிவில் இடமுள்ளது. இது தொடா்பான முன்மொழிவுக்கு கடந்த 2012-இல் ஒன்றிய அமைச்சரவை செயலகம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த முன்மொழிவு தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் உயா்நீதிமன்றங்களின் கருத் துகள் பெறப்பட்டன. ஆனால், அவை மாறுபட்டவையாக இருந்தன. தற்போதைய சூழலில், மேற்கண்ட முன்மொழிவு மீது கருத்தொற்றுமை எட்டப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *