தமிழிசை அவர்களே கருத்துச்சுதந்திரம் பற்றி நீங்கள் கருத்து கூறலாமா?

1 Min Read

ஸ்டாலின் அரசு கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி வருகிறது. ஒரு கருத்தைச் சொல்வதைக் கூட ஸ்டாலினால் தாங்க முடியவில்லை. எதற்கும் சிறை; கஸ்தூரி என்ன கூறினார். அவர் மனதிற்குப் பட்டதைக் கூறினார். அவர் கூறியதில் உண்மையும் உள்ளது ஏற்கெனவே பலர் கூறியதுதான், ஆனால் அவரை ஏதோ தீவிரவாதிபோல் தேடிச்சென்று கைதுசெய்துள்ளனர். சிறை வைத்தது கஸ்தூரியை அல்ல கருத்துச் சுதந்திரத்தை என்று கஸ்தூரி கைது குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை அவர்களே நினைவிருக்கிறதா?

கல்லூரி மாணவி சோபியா பாசிச பாஜக ஒழிக என்றுதான் விமானத்தில் முழக்கமிட்டார்.
அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? படிக்கும் மாணவி அவரது எதிர்காலம் வீணாகிவிடும் நாங்கள் எச்சரிக்கிறோம் என்று காவல்துறை உயரதிகாரிகள் மன்றாடிய போதும், அது எப்படி, நாளை இவளே தீவிரவாதியாக மாறிவிடுவாள். ஆகவே இவளுக்குப் பாடம் புகட்டவேண்டும் நீங்கள் அவள் கருணை காட்டுவதை நான் ஏற்கமுடியாது, நீங்கள் புகாரை ஏற்காவிட்டால் நான் உள்துறையிடம் புகார் அளிப்பேன் என்று காவல்துறை உயரதிகாரிகளை மிரட்டி 19 வயது மாணவியை சிறைவைத்தது மட்டுமல்லாமல், அவரது கனடா நாட்டுக் கல்விக்கே வேட்டு வைத்தார். தமிழிசை ஒட்டுமொத்த தமிழ்நாடே தமிழிசையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது.
அவர் இன்று கஸ்தூரிக்கு கண்ணீர் வடிப்பது நகைப்பாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *