‘100 விழுக்காடு தேர்ச்சி’ போன்ற பொய் விளம்பரம் கூடாது

Viduthalai
2 Min Read

பயிற்சி மய்யங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடில்லி, நவ.15 போட்டித் தோ்வு பயிற்சி மய்யங்களால் தவறான விளம்பரங்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு 13.11.2024 அன்று வெளியிட்டது. அதன்படி, ‘100 விழுக்காடு தோ்ச்சி’, ‘100 விழுக்காடு வேலை உத்தரவாதம்’ போன்ற பொய்யான கூற்றுகளுடன் விளம்பரங்கள் வெளியிட பயிற்சி மய்யங் களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
தேசிய நுகா்வோர் உதவி எண் ணில் பதிவான ஏராளமான புகார் களின் எதிரொலியாக, ஒன்றிய நுகா் வோர் பாதுகாப்பு ஆணையத்தால் (சிசிபிஏ) வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ‘பயிற்சித் துறையில் தவறான விளம்பரங்கள் தடுப்பு’ என்ற தலைப்பில் இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடா்பாக, ஒன்றிய நுகா்வோர் விவகாரங்கள் துறை செயலரும், ஒன்றிய நுகா்வோர் பாதுகாப்பு ஆணை யத்தின் தலைவருமான நிதிகரே

செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒன்றிய அரசு, பயிற்சி மய்யங்களுக்கு எதிரானதல்ல; அதேநேரம், அந்த மய்யங் களால் வெளியிடப்படும் விளம்பரங்கள், நுகா்வோர் உரிமையை மீறுவதை அனுமதிக்க முடியாது.
பயிற்சி மய்யங்கள் வேண்டுமென்றே மாணவா்களிடமிருந்து உண்மைத் தகவல்களை மறைப்பதையும், பொய் யான கூற்றுகளை வெளியிடுவதையும் காண்கிறோம். எனவே, பயிற்சி மய்யங் களின் விளம்பரங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கல்வி சார் ஆதரவு, வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் அதுசார்ந்த சேவைகள் தொடா்பான விளம்பரங்களுக்கு இவை பொருந்தும்.
அதன்படி, தங்களால் வழங்கப்படும் படிப்புகள், அவற்றின் காலகட்டம், ஆசிரியா்களின் தகுதி, கட்டணங்கள், கட்டண திருப்பியளிப்பு கொள்கை, தோ்ச்சி தரவரிசை, வேலை உத்தர வாதம் உள்ளிட்டவை குறித்து பொய்யான கூற்றுகளை வெளியிட பயிற்சி மய்யங் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்களது பயிற்சி மய்ய வெற்றி யாளா்களின் ஒளிப்படம் மற்றும் கருத்துகளை, அவா்களின் எழுத்துபூா்வ அனுமதி இல்லாமல் வெளியிடக் கூடாது. படிப்புகள் பற்றிய முக்கியத் தகவல்கள் மற்றும் மறுப்புத் தகவல்களை எளிதாக காணும் வகையில் காட்சிப் படுத்த வேண்டும்.
யுபிஎஸ்சி தோ்வுகளில், முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வை சுய பயிற்சி வாயிலாகவே பெரும்பாலான மாணவா்கள் தோ்ச்சி பெறுகின்றனா். நோ்காணலுக்கு மட்டுமே பயிற்சி மய்யங்களின் உதவியை நாடுகின்றனா். எனவே, வெற்றியாளா்கள் உண்மையில் எந்த படிப்பில் சோ்ந்தனா்? என்பதை வருங்கால மாணவா்கள் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
பயற்சி மய்யங்களில் உள்ள வசதிகள், சேவைகள், உள்கட்டமைப்பு, ஏஅய்சிடிஇ, யுஜிசி போன்ற உயா் அமைப்புகளால் பெறப்பட்ட அங்கீகா ரம் உள்ளிட்டவற்றை துல்லியமாக வெளிப்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால், நுகா்வோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படும் என்றார் அவா்.
பயிற்சி மய்யங்கள் தொடா்பாக தேசிய நுகா்வோர் உதவி எண்ணுக்கு கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையில் இதுவரை 54 தாக்கீதுகள் பிறப்பிக்கப்பட்டு, ரூ.54.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *