திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவு!
திருநெல்வேலி, நவ. 11- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழககலந்துறவாடல்கூட்டம் 9.11.2024 அன்று மாலை ஆறுமணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில் உற்சாகமாக நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன் செயல்திட்டங்களை விளக்கியு ரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று நவம்பர் -26இல் ஈரோட்டில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவேண்டிய அவசியம் குறித்தும்,
டிசம்பர்- 2 ல் சென்னை யில் நடைபெறும் ஆசிரியர் அவர்களின் 92-ஆவது பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் சென்று பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதியளிக்க வேண்டிய மிகமுக்கிய கடமை களை விளக்கி உரையாற்றினார்.
கூட்டத்தில் காப்பாளர் இரா.காசி,மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.வீரபாண்டியகட்டபொம்மன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.தமிழ்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.பிரபாகரன், சேரன்மாதேவி ஒன்றியத் தலைவர் கோ.செல்வசந்திரசேகர், வீரவநல்லூர் கழகத்தலைவர் மா.கருணாநிதி,தச்சநல்லூர் பகுதி தலைவர் இரா.கருணாநிதி, செயலாளர் மாரி.கணேசு, மாநகர செயலாளர் வெயிலுமுத்து, அம்பை முத்துக்குமார், ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள். பெரியார் பிஞ்சு இதழுக்கு மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன்ரூ.600.
மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் ரூ.600.
மாநகர மாணவர் கழக செயலாளர் சிறீநாத்ரூ.600 வழங்கி மகிழ்ந்தார்கள்.
தீர்மானங்கள்
மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன் தாயார் பேச்சியம்மாள் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.
நவம்பர்-26இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 2இல் சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று தமிழர் தலைவரிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளித்து மகிழ்வதென தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வீரவநல்லூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் குடும்ப விழா-விருந்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றவும், சட்டப்பேரவை மேனாள் தலைவர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரை நூல்வெளியீட்டு வாழ்த்துரை வழங்கவும் சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 26இல் திருச்சி யில் நடைபெறும் உலக பகுத் தறிவாளர் மாநாட்டிற்கு நன் கொடை திரட்டி மாவட்ட ப.க. தலைவரிடம் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது.