கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

8.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2026இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், கோவையில் கள ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
தி இந்து:
* துல்லியமான தரவு இல்லாமல், பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்ற எங்கள் இலக்கை அடைய முடியாது. தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்களை தவிர்த்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் என ரேவந்த் ரெட்டி பேட்டி.
* உத்தவ் தாக்கரே வெளியிட்ட சிவசேனாவின் (UBT) தேர்தல் அறிக்கை, தற்போது உள்ள 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குவதாகவும், அதானி குழுமம் மேற்கொள்ளப்படும் மும்பையில் உள்ள தாராவியின் குடிசைப் பகுதிகளை மீண்டும் மேம்படுத்தும் திட்டத்தை நிறுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 170 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 93 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், 30 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நாக்பூர் மாநாட்டில் அரசியல் சாசன நகலை தான் காட்டுவது குறித்து தேவேந்திர பட்னாவிசின் சர்ச்சைக்குரிய கருத்து அம்பேத்கருக்கு அவமானம் என்று கூறிய ராகுல் காந்தி, அரசியலமைப்பின் மீதான பாஜகவின் தாக்குதலுக்கு மகாராட்டிரா மக்கள் பழிவாங்குவார்கள் என பதிலடி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *