அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுயசிந்தனையாளர் மாநாடு களப்பணியில் பொறுப்பாளர்கள்

Viduthalai
1 Min Read

திருச்சி, நவ.3- 13ஆவது அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டிசம்பர் 28, 29 ஆகிய நாட்களில் திருச்சியில் நடைபெறுவதையொட்டி செய்யவேண்டிய முன்னேற்பாடு கள் பற்றிய திட்டமிடுதலுக்காக பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர்கள் மாநாடு நடைபெறும் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கூடி தொடக்க பணிகள் குறித்து முடிவு செய்தனர்.
பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன், வா.தமிழ் பிரபாகரன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் செல்வ.மீனாட்சி சுந்தரம், பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, துணை பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநில அமைப்பாளர் கோபு பழனிவேல், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ, பெரம் பலூர் மாவட்ட தலைவர் நடராசன், திருச்சி மாவட்ட தலைவர் மதி வாணன், பேரா.ராஜேஷ், திருச்சி ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *