மாதாந்திர கூட்டம் நடத்திட முடிவு
சிதம்பரம், நவ.3- சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந் துரையாடல் கூட்டம் 26.10.2024 அன்று மாலை சிதம்பரம் சேத்தியாதோப்பு, மழவராய நல்லூர் பெரியார் தாசன் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிதம்பரம் மாவட்ட கழக தலைவர் கோ. நெடுமாறன் தலைமையேற்றார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆ. செங்குட்டுவன் வரவேற்று உரை ஆற்றினார். கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா.பெரியார் செல்வன் எடுத்துரைத்தார். குமார குடி ஆறுமுகம், கீரப்பாளையம் கதிரவன், புவனகிரி பூ. கபிலன் , வேகா கொல்லை ராஜகுமாரன், சிற்பி சிலம்பரசன், கீரப்பாளையம் பேரா. முனைவர் கலைச்செல்வன், சிதம்பரம் சுந்தரமூர்த்தி, வானமாதேவி பா. முருகன், ஆண்டிபாளையம் பஞ்சநாதன், வலசக்காடு வீரமணி, பூந்தோட்டம் ஆசிரியர் அசோக் குமார் ஆகியோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள் .
சிதம்பரம் மாவட்ட கழக தலைவர் பேரா. பூ.சி.இளங்கோவன், மாநில கழக இளைஞர் அணி செயலாளர் நாத்திக. பொன்முடி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகன் கருத்துரை யாற்றினார்கள்.
இறுதியில் பேசிய தலைவர் கோ .நெடுமாறன் அடுத்த மாதம் முதல் சிதம்பரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாதாந்திர கூட்டம் நடத்தப்படும் என்றும், முதல் கூட்டத்தில் மாவட்ட தலைவர் பேரா. பூ.சி. இளங்கோவன் சிறப்புரை ஆற்றுவார் என்று அறிவித்தார். தொடர்ந்து குமாரகுடி பெரியார் தாசன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது. அனைவருக்கும் பெரியார் தாசன் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.