ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்ட 120 வலைதள அலை வரிசைகள் முடக்கம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஒப்புதல்

Viduthalai
1 Min Read

கமுதி, அக்.31 வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் ஒன்றிய அரசுக்கு எதி ராக செய்திகளை வெளி யிட்ட 120 சமூக வலை தள சேனல்களை முடக்கி யுள்ளோம், என ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கூறினார்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக மாநில ஒருங் கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் மாவட்டத் தலைவர் தரணி முரு கேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவரின் கனவை நிறைவேற்றிக் கொண்டு இருப்பவர் பிரதமர் மோடி. வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்ற மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார்.

மீனவர் விவகாரத்தில் இருநாட்டு கூட்டுக்குழு பேச்சு வார்த்தையில் மீனவ பிரதிநிதிகளை நியமனம் செய்தால், அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அதற்கான முன்னெடுப்பை ஒன்றிய அரசு மேற் கொண்டு வருகிறது. மீனவர் களுக்கான 65 சதவீத நிதியை ஒன்றிய அரசு தருகிறது.

முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற் றாமல் ஒன்றிய அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட 120 சமூக வலை தள சேனல் களை முடக்கி உள்ளோம். இன்னும் பல சேனல்களை முடக்க உள்ளோம்.

இந்திய இறையாண் மைக்கு எதிராக செய்திகளை பதிவு செய்யும் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஒளிபரப்புக் கொள்கை தொடர்பாக ஒன்றிய அரசு ஊடக வல்லுநர் களிடம் கருத்துக் கேட்டுள் ளது, என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *