முதலமைச்சர் சித்தராமையா குறித்து அவதூறு பா.ஜனதா பெண் நிர்வாகி கைது

Viduthalai
1 Min Read

பெங்களூரு: ஜூலை 29- கருநாடக மாநிலம்  பா.ஜனதா பெண் நிர்வாகி சகுந்தலா என்பவர் காங்கிரஸ் கட்சியையும், முதல மைச்சர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறாக பேசி இருந்தார். இதுதொடர்பான கருத்து ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி பெங்க ளூரு அய்கிரவுண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் சகுந்தலாவை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இதுகுறித்து காவ லர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை

ராஞ்சி, ஜூலை 29- ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் சுபாஷ் முண்டா சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். இதனால், அப்பகுதியில் கடைகள் சூறையாடப்பட்டன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பல்வேறு பழங்குடியின அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பாக காவல் துறை யினர் தரப்பில் கூறப்பட்டதாவது:

கடந்த 27.7.2023 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சுபாஷ் முண்டாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பினர். இதில் 5 முதல் 8 குண்டுகள் அவர் மீது பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொலைக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், கொலையாளிகளைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ராஞ்சியில் சில இடங்களில் சுபாஷ் முண்டா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. போக்குவரத்தும் முழுமை யாக முடங்கியது. ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியினர் பிரிவும் சுபாஷ் மறைவைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *