அரூர், அக். 23-அரூர் கழக மாவட்டம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் தோழர் இரா.இராமச்சந்திரனின் தந்தையார் இராஜி பச்சையப்பன் 13.10.2024ஆம் தேதி மறைவுற்றதைத் தொடர்ந்து அவரது படத்திறப்பு நிகழ்வு கட்டரசம்பட்டியில் 20.10.2024ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலை மையில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் வழக் குரைஞர் ரே.வடிவேலன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மு.பொன்முடி, அரூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் என்.டி. குமரேசன், ஊற்றங்கரை ஒன்றிய கழக செயலாளர் சிவராஜ், மகளிர் அணி பொறுப்பாளர் உமா, ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் க.பொ. இளங்கோ, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சண்முகம் துணை வட்டாட்சியர் சிவஞானம், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேஷ் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பெ. கல்பனா ஆகியோர் நினைவேந்தல் உரை ஆற்றினர்.
திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் ராஜி பச்சையப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்து பேசினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா. சரவணன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாளையம் சஞ்சீவன், மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் பங்கேற்றனர். இறுதியாக ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் இராமச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.