Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: பார்ப்பனர்களுக்கு கிருஷ்ணர் தேவராய மன்னன் நிலம் அளித்த செப்பேடு கண்டுபிடிப்பு
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

பார்ப்பனர்களுக்கு கிருஷ்ணர் தேவராய மன்னன் நிலம் அளித்த செப்பேடு கண்டுபிடிப்பு

Last updated: October 21, 2024 4:14 pm
Published: October 21, 2024
SHARE

திருவள்ளூர், அக். 21- திருவள்ளூர் அருகே மப்பேடு சிறீசிங்கீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் சிறீ சிங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இக்கோயில், இந்துசமய அறநிலையத் துறை யின் கீழ் உள்ளது.
இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், சிறீசிங்கீஸ்வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனையில் ஈடுபட்டார்.
அச்சோதனையில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் முத்திரையை கொண்ட வளையத்தில் இணைக் கப்பட்ட இரு செப்பேடுகள் கண் டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த செப்பெடுகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டிருந் ததால், அதன் ஒளிப்படங்களை கருநாடகா மாநிலம்- மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவுக்கு மாவட்ட தொல்லியல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, செப்பேடுகளின் ஒளிப்படங்களை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவின் இயக்குநர் கே.முனிரத்தினம், ‘‘சிறீசிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகள், 1,513ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பார்ப்பனர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறுபெயரிடப்பட்ட வாசல பட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செப்பேடுகளின் முழு விவரங்களை அறிய விரைவில் இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவினர், மப்பேடு சிறீசிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்ய உள்ளதாக மாநில தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை போக்குவரத்து கழகத்தில் 242 புதிய பேருந்துகள்
சென்னை, அக். 21- தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2022-2023 மற்றும் 2023-2024ஆம் ஆண்டிற்கான அறிவிப்பின்படி 2 ஆயிரம் புதிய பேருந்துகளில் இதுவரை ஆயிரத்து 905 புதிய பேருந்துகள் பயன் பாட்டிற்கு வந்துள்ளன. அதேபோல் அடிச்சட்டம் நல்லநிலையில் உள்ள ஆயிரத்து 500 பேருந்துகளில் கூண்டு முழுவதும் புதுப்பிக்க ஆணை வழங்கப்பட்டு, அதில் ஆயிரத்து 262 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
மேலும், மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ஏற்கெனவே மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பேருந்துகளுடன், கூடுதலாக 41 புதிய தாழ்கள பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
2024-2025ஆம் வருடத்திற்கான அறிவிப்பின்படி 3 ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஏற்கெனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ள நிலையில், இன்று (நேற்று) முதல் சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் 80 புதிய பி.எஸ்.-6 ரக சாதாரண பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட் டுள்ளது.
மேற்கண்ட பி.எஸ்.-6 ரக சாதாரண பேருந்துகள் “விடியல் பயணத்திட்டத்தில்” இயக்கப்படுவதால் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோர் பயன் பெறுவார்கள். – இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!
நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகைக்குடும்பன் ஆகியோர் கூறியதாவது:
தென்காசி மாவட்டம் அனுமன் நதி, மேற்கு தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகி தென்காசி மாவட்டத்தில் பாய்கிறது. இந்த ஆறு சாம்பவா் வடகரையைக் கடக்கும் இடத்தில் ஒரு கிளை வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் படித்துறையில் 114 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்தக் கல்வெட்டு சிறீ என்ற எழுத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 8 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொல்லம் ஆண்டு 1086 ஆவணி 1 ஆம் தேதி (17/08/1910) மலையாளப் புத்தாண்டு தொடங்கும் நாளில் பொறிக்கப்பட்டுள்ளது.
சங்கரலிங்கய்யா் பேரனும் சாமுவய்யா் மகனுமான ராமய்யா் என்பவா் இந்தப் படித்துறையைக் கட்டியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மிகுந்த எழுத்துப் பிழைகளுடன் தமிழிலும் கிரந்தத்திலும் பொறிக்கப்பட்ட இக் கல்வெட்டு, சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அருகே இருப்பதால் மிகுந்த முக்கியத்துவவம் பெறுகிறது.

மதுரை அன்னியா் வசப்பட்டபின் தெற்கே தென்காசி சென்ற பிற்காலப் பாண்டியா்கள், அங்கிருந்து ஆட்சிபுரியத் தொடங்கினா். கி.பி.15 ஆம் நூற்றாண்டில் தென்காசி பாண்டியா்களில் மிகவும் புகழ்பெற்றவரும் தீவிர சிவபக்தருமான பராக்கிரம பாண்டியன், சிவன்கோயில்கள் பல எடுப்பித்து அக்கோயில்களில் சிவபூஜை தடையின்றி தொடர சிவபிராமணா்களுக்கு அய்ந்து அகரங்கள்(அக்ரஹாரம்) அமைத்துக் கொடுத்தார் என்பது கல்வெட்டுகளில் கிடைக்கும் அவரது மெய்க்கீா்த்தியில் இருந்து தெரியவருகிறது. அவ்வாறு அவா் அமைத்துக் கொடுத்த ஒரு அகரம்தான் சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அகரம். இந்த அகரத்தைச் சோ்ந்த சிவபிராமணா்களின் வழிவந்தவரான ராமய்யா் என்பவா்தான் சென்ற நூற்றாண்டில் இந்தப் படித்துறையை அமைத்து கல்வெட்டு பொறித்தார் என்பது தெரிகிறது.
அகரத்தை (அக்ரஹாரத்தை) சோ்ந்த பார்ப்பனா்கள் மட்டும் நீராடுவதற்கு இந்த கிளை வாய்க்கால் படித்துறை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.அனுமன் நதியில் பிற பொதுமக்கள் நீராடி இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் ‘தா்மோ ரக்ஷகக் கபிம்’ என்று கிரந்த எழுத்தில் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்த தா்மத்தை அனுமன் காப்பார் என்பதாகும் என்றனா்.

Also read

தமிழ்நாடு
வதந்திகளை நம்ப வேண்டாம் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த அய்ந்து நாள்களில் பேருந்துகளில் ஆறு லட்சம் பேர் பயணம் விரைவுப் போக்குவரத்து கழகம் தகவல்
குரூப் 2, 2ஏ பதவிக்கான தேர்வு தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய அவகாசம்
Ad imageAd image
நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு திட்டம் போரூரில் ரூ. 258 கோடியில் குடிநீர் தேக்கம் பயனடைவோர் பத்தாயிரம் குடியிருப்புவாசிகள்
சென்னை மாநகராட்சியின் மனிதநேயம் சென்னை கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சக்கர நாற்காலி
இந்திய விண்வெளி வீரர் 10ஆம் தேதி விண்வெளிக்குப் பயணம்
ஆதார் தொடர்பான மோசடியை எவ்வாறு தவிர்ப்பது?
TAGGED:கல்வெட்டுதிருவள்ளூர்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?