சிந்துவெளி நாகரிகம் ஆய்வறிக்கை நூற்றாண்டு பகுத்தறிவாளர் கழக சிறப்புக் கூட்டம்

viduthalai
1 Min Read

பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்புக் கூட்டம் 12.10.2024 அனறு மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். புதுமை இலக்கிய தென்றல் அமைப்பின் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம் இணைப்புரை வழங்க, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் க.கார்த்திகேயன் தொடக்கவுரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையுரை நிகழ்த்த, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் “சிந்துவெளி நாகரிகம் ஆய்வறிக்கை நூற்றாண்டு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். திருவொற்றியூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கு.ஆசைத்தம்பி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் திரளான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *