கோபி கழக மாவட்டம் ஆசனூரில் அக்.26,27 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இளைஞர்கள், மாணவர்களுக்கு அழைப்பு

0 Min Read

ஈரோடு மாவட்டம் கோபி கழக வட்டம் ஆசனூரில் மாணவர்கள், இளைஞர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளதாக விடுதலை நாளிதழில் அறிந்தேன். பெரியார் சிந்தனைகளை தெரிந்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆசிரியர் வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் பூங்குன்றன் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஈரோடு கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இப்பயிற்சி வகுப்பின் மூலமாக பயன்பெறுவோம் வாருங்கள் தோழர்களே.

– கண்ணம்மா சட்டக் கல்லூரி மாணவி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *