அறந்தாங்கி கழக மாவட்டம் புளிச்சங்காடு கைகாட்டியில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா அறிஞர் அண்ணா 116ஆம் ஆண்டு விழா சுயமரியதை இயக்க நூற்றாண்டு விழா, கழக பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் க.மாரிமுத்து தலைமையேற்க மாவட்ட செயலாளர் ச.குமார், மாவட்ட துணை தலைவர் பெரியார் வீர விளையாட்டு கழக மாநில அமைப்பாளர் கரம்பகுடி முத்து ப.மகாராசா, மாவட்ட ப.க செயலாளர் க.வீரையா ப.க துணைச்செயலாளர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை ஏற்றனர். தொடக்க உரையாற்றினர் கழக பேச்சாளர் மாங்காடு மணியரசன்.
புளிச்சங்காடு கைகாட்டியில் கழக பொதுக்கூட்டம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books