ஜம்மு-காஷ்மீா் முதலமைச்சரானார் ஒமா் அப்துல்லா துணை முதலமைச்சர் சுரீந்தா் சவுத்ரி, நான்கு அமைச்சா்களும் பதவியேற்பு

1 Min Read

புதுடில்லி, அக்.17 ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகான பேரவைத் தோ்தல் என்ப தோடு, கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும்.
துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் அய்ந்து உறுப்பினர் களையும் சோ்த்து, ஜம்மு-காஷ்மீா் பேரவையின் மொத்த பலம் 95 என்ற நிலையில், தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 42 இடங்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 6 இடங் களிலும், மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் வென்றன. இதையடுத்து, முதலமைச் சராக ஒமா் அப்துல்லா தோ்வு செய்யப்பட்டார். அவருக்கு 4 சுயேச் சைகள் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தெரிவித்தனா்.

முதலமைச்சராக ஒமா் பதவியேற்பு: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்து வந்த நிலையில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசு நேற்று (16.10.2024) பதவியேற்றது. சிறீநகரில் உள்ள ஷொ்-இ-காஷ்மீா் பன்னாட்டு மாநாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக ஒமா் அப்துல்லா பதவியேற்றார். தேசிய மாநாட்டுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான சுரீந்தா் சவுத்ரி, சகீனா மசூத், ஜாவத் தார், ஜாவத் ராணா, சுயேச்சை உறுப்பினர் சதீஷ் சா்மா ஆகிய 5 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். அனைவருக்கும் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

துணை முதலமைச்சர் சுரீந்தா் சவுத்ரி: நவ்ஷேரா தொகுதியில் ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னாவை சுமார் 7,800 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியவரான சுரீந்தா் சவுத்ரிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *