புதுச்சேரியில் கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு!

1 Min Read

புதுச்சேரி, செப்.30- தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2024 அன்று புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கி. அறி வழகன், வாழ்விணையர்
அ.எழிலரசி ஆகியோரின் 38 ஆவது ஆண்டு திருமண நாள் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் வாழ்விணையர் மருத்துவர். ந.ஷகிலா ஆகியோரின் 25 ஆவது ஆண்டு திருமண நாள் புதுச்சேரி, இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாநிலத் தலைவர் சிவ.வீர மணி திருமண நாள் நினைவினைக் கொண்டாடும் இணையருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து கழகத் தோழர்களும், நண்பர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தும், சால்வை அணி வித்தும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

25 ஆவது திருமண நாள் நினை வாக நெ.நடராசன் – ந.ஷகிலா ஆகியோர் ‘‘விடுதலை’’ வளர்ச்சி நிதியாக ரூபாய் ஆயிரம் ( ரூ.1,000/–) வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *