கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

4.8.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

👉 இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டில்லி அரசை கட்டுப்படுத்தும் மசோதா நேற்று (3.8.2023) மக்களவையில் நிறைவேறியது.

👉 மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கிருஷ்ணய்யா, பிரதமர் மோடியை சந்தித்து பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தார்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉உடல் உறுப்பு கொடையில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

தி இந்து:

👉 1,365 அய்.ஏ.எஸ். பணியிடங்கள், 703 அய்.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு மாநிலங்கள வையில் தெரிவித்துள்ளது. இவை தவிர, இந்திய வனப் பணியில் (IFS)1,042 காலியிடங்களும், இந்திய வருவாய் சேவை யில் (IRS) 301 இடங்கள் காலியாக உள்ளன என்று ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

தி டெலிகிராப்:

👉 அசாமின் தர்ராங் மாவட்டத்தில் ஜூலை இறுதியில் மங்கள்தோய் தனியார் பள்ளியில் ஆயுதப் பயிற்சி முகாம் நடத்திய இந்துத்துவா அமைப்பை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் முகாமில் வி.எச்.பி. அமைப்பால் உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ராஷ்டிரிய பஜ்ரங் தள உறுப்பினர்கள் கலந்து கொண்டு வளாகத்திலேயே தங்கினர்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *