வல்லம், செப்.24- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்ட மைப்பின் சார்பில் மாநில அளவிலான நான்கு விருதுகள் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
1920-ஆம் ஆண்டு கொல்கத் தாவில் தொடங்கப்பட்டு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பான இந்திய பொறி யாளர் கூட்டமைப்பு Institution of Engineers (India) IE(T) சார்பில் 15.09.2024 அன்று 57ஆவது பொறியாளர் நாள் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சிறப்பான செயல்பாடுகளான தொழில் நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்து வதன் மூலம் மாணவ, மாண வியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டும் விதமாக, பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு “கல்விசார் விருது (பாலிடெக்னிக்) 2024” (Institutional Excellence Award (Polytechnic) 2024) மற்றும் “சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது 2024” (Best IE(I) Students Chapter Award – 2024) இவ்விருதுகளை இந்திய பொறியாளர் கூட்டமைப்பு IE(I) தலைவர் முனைவர் ஜி.ரெங்கநாத், FIE வழங்க இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
மேலும் இவ்விழாவில் “சிறந்த முதல்வர் விருது (பாலிடெக்னிக்) 2024” (Best Principal Award (Polytechnic) 2024) இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா அவர்களுக்கும் மற்றும் “புதுமையான ஆசிரியர் விருது 2024” (Innovative Teacher Award 2024) விருது இக்கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறைத்தலைவர் க.ரோஜா அவர் களுக்கும் வழங்கப்பட்டது.