வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் ‘‘சமூகநீதி நாள்’’ உறுதிமொழி ஏற்பு!

0 Min Read

வேலூர், செப்.22 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ‘‘சமூகநீதி நாளை’’யொட்டி அரசு வேலூர் மருத்து வக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக அலுவலக வளாகத்தில் 16-09-2024 அன்று முற்பகல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ரதி திலகம் தலைமை வகிக்க, குடியிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர்
சி. இன்பராஜ் முன்னிலை வகித்து ‘‘சமூகநீதி நாள்’’ உறுதிமொழியினை வாசிக்க, மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *