நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதுடன் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக. 5– மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்ட ணியை எதிர்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங் கிணைந்து, ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக் கிய வளர்ச்சிக் கூட்டணி) என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி யுள்ளன. அதேபோன்று, பாஜகவும் தங்கள் ஆதரவு கட்சிகளோடு இணைந்து தேசிய ஜனநாயக கூட்ட ணியை மீண்டும் அரசியல் களத்திற்கு கொண்டு வந் துள்ளது. 

இந்த நிலையில் பாஜகவின் தேசிய ஜன நாயக கூட்டணி குறித்து காங்கிரஸ் செய்தித்  தொடர்பாளரும், மாநி லங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 

அதாவது, காங்கிரஸ் தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி உருவானதை பிரதமர் நரேந்திர மோடி யால் பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்கப்பூர்வமாக எதை யும் சாதிக்காமல் வெறு மனே போக்கு காட்டி வருவதையும், பிரிவினை யைத் தூண்டும் அரசியலையும் மக்கள் அறவே வெறுக்கின்றனர்.

தற்போது தேவையா னது, நாட்டின் ஜனநாய கத்தைக் காப்பது மட்டு மல்லாது, வலுப்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *