திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ. மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி 2.9.2024 அன்று காலை 10 மணிக்கு, தெற்கு ரோட்டரி மண்டபத்தில் நடைபெற்றது. வேலு தலைமை வகித்தார். ப.க. மாவட்ட தலைவர் இளங்கோவன் துவக்கவுரையாற்றினார். ப.க.மா. செயலாளர் மு.நாச்சிமுத்து (திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மேனாள் ஒன்றிய செயலாளர்) முன்னிலை வகித்தார். மு.துரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.