திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்பு
சட்டமன்ற மேனாள் தலைவர் ஆவுடையப்பன், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் வஹாப், நெல்லை மேயர் இராமகிருஷ்ணன் (கிட்டு), சுப.சீதாராமன், மேனாள் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
நெல்லை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ள இராமகிருஷ்ணன் (கிட்டு) அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். மூத்த திராவிட இயக்க சிந்தனையாளர் சுப.சீதாராமன், பெரியார் பெருந்தொண்டர் வேலாயுதம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மூத்த திராவிட இயக்க சிந்தனையாளர் பத்தமடை பரமசிவம், திராவிடர் கழக மாநகரத் தலைவர் மும்பை ரெத்தினசாமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். மூத்த பெரியார் பெருந்தொண்டர் காசி உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தமிழர் தலைவர் நேரில் சென்று நலம் விசாரித்தார்