புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்சன் ஹாலில் கே.ஜி.எஸ். தினகரன் – கமலி தினகரன் இணையரின் மகன் கே.ஜி.எஸ்.டி. சரத், இரா. பிச்சாண்டி – தாட்சாயணி பிச்சாண்டி இணையரின் மகள் பி. நிவேதிதா ஆகியோரின் இணையேற்பு விழாவை இன்று (30.8.2024) காலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி முன்னிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள்: க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன், மக்களவை உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், இரா. ரவிக்குமார், மேனாள் மக்களவை உறுப்பினர் பொன் சிகாமணி, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், அய்யப்பன், சபா. ராஜேந்திரன், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் ஹனிபால், செந்தில்குமார், சம்பத், புதுச்சேரி சட்டமன்றத் தலைவர் எஸ்.பி. சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கடலூர் மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.