குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக ஆர். எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

நாகர்கோயில், ஆக. 3- திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ஆர்.எஸ். எஸ். என்னும் டிரோஜன் குதிரை, ஆர். எஸ். எஸ். பற்றி ஆகிய நூல்கள் அறிமுக விழா நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாவட் டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ் வரவேற்புரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் சி. கிருஷ்ணேஷ்வரி பங்கேற்றார் மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் மாவட்ட காப்பாளர் ம. தயாளன் ஆகி யோர் முன்னிலை வகித்து உரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் விரிவாக சிறப்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் மு. இராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் சி. அய்சக் நியூட்டன் இலக்கிய அணிச் செயலாளர் பா. பொன்னுராசன் தொழிலாளர் அணி செயலாளர் க. யுவான்சு கோட்டார் பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை கழகத் தோழர்கள் முத்து வைரவன் ஆதித்தன் கார்மல் மற்றும் ஏராளமானர் கலந்து கொண்டு ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூலினை ஆர்வமுடன் பெற்றுக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *