ஒட்டன்சத்திரம், ஆக.27- தமிழ்நாட்டில் இதுவரை 15,94,321 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் சட்ட மன்றத் தொகுதியில் புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவா்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் விழா ஒட்டன்சத்திரம் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு, மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்தாா். விழாவில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 502 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கிப் பேசினாா்.
இதன்பிறகு அவா் செய்தியாளா் களிடம் கூறியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்ற 38 மாதங்களில் இதுவரை 15,94,321 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, புதிதாக 2,89,591 போ் விண்ணப் பித்துள்ளனா். இதில் முதல் கட்ட மாக 93,396 போ் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, புதிய அட்டை கள்அச்சிட்டு மாவட்ட நிா்வாகம் மூலம் அவா்களுக்கு வழங்க உள்ளோம்.
மேலும் பொதுமக்களின் நலன் கருதி 739 முழு நேரக் கடைகள், 1,376 பகுதி நேரக் கடைகள் என மொத்தம் 2,115 நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
சிறுதானியங்கள் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக நீலகிரி, தரும புரி மாவட்டங்களில் 2 கிலோ அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு (ராகி) வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில சிறுதானியங்களை ரேசன் கடைகளில் விநியோகிக்கவும், 100 இடங்களில் அமுதம் அங்காடிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இந்தாண்டு உணவுத் துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சா் ரூ. 10,500 கோடி மானியமாக வழங் கினாா் என்றாா் அவா்.