‘யுபிஎஸ்சி-இன் ‘யு’ என்பது மோடி அரசின் யு – டர்ன்களை குறிக்கிறது’’

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி, ஆக.26- யுபிஎஸ்சி-இல் உள்ள ‘யு’என்பது மோடி அரசின் யு டர்ன் களைக் குறிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேலி செய்துள்ளார். ஒருங்கிணைந்த ஓய்வூ திய திட்ட அறிவிப்பு குறித்து கார்கே இவ்வாறு சாடியுள்ளார்.
நேற்று (25.8.2024) கார்கே வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் தளப் பதிவில், “மக்களவைத் தேர்தலுக்கு பின்பு, எதிர்க்கட்சிகளின் எழுச்சிக்கு பின்பு மோடி தலைமையிலான அரசு அதன் சமீபத்திய முக்கிய முடிவுகளை திரும்பப் பெற்றுள்ளது. யுபிஎஸ்சி–-இல் உள்ள ‘யு’ என்பது மோடி அரசின் யு-டர்ன்களை குறிக்கிறது. ஜூன் 4ஆம் தேதிக்கு பின்பு, பிரதமரின் அதிகாரத் திமிரை விட மக்களின் அதிகாரம் மேலாங்கத் தொடங்கி உள்ளது.

நீண்ட கால மூலதன ஆதாயம், அட்டவணைப்படுத்தலை பட்ஜெட்டில் திரும்பப் பெற்றது. வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றக் கூட்டு குழுவுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதாவை திரும்பப் பெற்றது, நேரடி நியமன அறிவிப்பை திரும்பப் பெற்றது. பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம், இந்த சர்வாதிகார ஆட்சியில் இருந்து 140 கோடி இந்தியர்களை பாதுகாப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூ தியத்தை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு (UPS) ஒன்றிய அரசு 25.8.2024 அன்று ஒப்புதல் அளித்திருந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தினை தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு, குறைந்தபட்சத் தகுதியான 25 ஆண்டு பணிக்காலச் சேவைக்கு முந்தைய 12 மாத ஊதியத்தின் சராசரியில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவர். இந்தத் திட்டம், குறைந்தபட்சம் 10 ஆண்டு பணிச்சேவைக்கு பின்பு, குறைந்தபட்சம் ரூ.10,000 பெறுவதை உறுதி செய்கிறது. இதனிடையே பாஜக அரசு ஆளாத மாநிலங்கள், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக (என்பிஎஸ்) பழைய ஓய்வூதிய திட்டத்துக்குத் (ஓபிஎஸ்) திரும்ப முடிவு செய்துள்ளன. பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் அமைப்புகள் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.
பழைய ஓய்வு ஊதிய திட்டத்தின் படி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தான் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடியும். அகவிலைப்படி விகிதங்களின் அதிகரிப்புடன் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *