சமூக நீதியில் தமிழ்நாடு 69% , ஒன்றிய அரசு துறைகளில் 27%
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு புகழாரம் !
முனைவர் துரை. சந்திரசேகரன் கருத்தாழமிக்க உரை!
ராலேமோரிஸ், ஆக. 25- அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் வடக்கு கரோலினா மாநிலம் தலைநகர் ராலே மோரிஸ் வில் பகுதியில் 27.7.2024 அன்று மாலை 3:30 மணி முதல் 6:00 மணி வரை சமூகநீதி வரலாற்று கருத்தரங்கம் பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் தலைமையில் கரோலினா தமிழ் சங்கத் தலைவர் பாரதி பாண்டி முன்னிலையில் நடைபெற்றது. பெரியார் பன் னாட்டு மய்ய தோழர் மோகன் வைரக்கண்ணு வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்வில் விர்ஜீனியா பெரியார் பிஞ்சுகள் இனியா-இலக்கியா ஆகியோர் “கிழவன் அல்ல அவன் கிழக்கு திசை”, “நூலைப் படி சங்கத்தமிழ் நூலைப் படி” ஆகிய பாடல்களை தொடக்கத்தில் பாடினர்.
நிகழ்வில் சுஜாதா, சாந்தி, கலைச்செல்வி, அறிவுப் பொன்னி, பொறியாளர் எழில் வடிவன், டாக்டர் சரோஜா இளங்கோவன், சார்லட் அழகிரிசாமி, முரளி, ஆனந்த், மதி, இளஞ்செழியன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்ததுடன் நிகழ்வின் தலைப்பை ஒட்டி கேள்விகளையும் எழுப்பினர்.
நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் “சமூகநீதி வரலாறு-ஒரு தொடர் ஓட்டம்” எனும் தலைப்பில் சிறப்பான உரையாற்றினார். அவர் தமது உரையில், நீதிக் கட்சி காலம் தொட்டு சமூகநீதி – இட ஒதுக்கீடு படிப்படியாக காங்கிரஸ் காலத்திலும் திமுக காலத்திலும் அதிமுக காலத்திலும் எப்படியெல்லாம் தொடர்ந்து வளர்ந்து வந்த வரலாற்றை அதற்காக திராவிடர் கழகம் ஆற்றிய பங்கு பணிகள் நடத்திய போராட்டங்கள் தந்தை பெரியார் காலம் தொட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் காலம் வரை தொடர்ந்து போராடி ஈகம் செய்த வரலாற்றை சிறப்பாக பதிவு செய்தார்.
தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய துணைக் கண்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிய அரசு துறைகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை மண்டல்குழு அறிக்கை அமல்படுத்தப்பட்ட காரணத்தால் இன்றைக்கு அனுபவிக்க கூடிய பெரிய வாய்ப்புக்கு ,திராவிடர் கழகமும் அதன் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்திய போராட்டங்கள், பரப்புரைகள், ஈகங்கள் சாதாரணமல்ல. அதிகபட்ச பங்களிப்பை திராவிடர் கழகம் ஆற்றிஇருக்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கிப் பேசினார். இந்திய துணைக் கண்டம் முழுவதும் வாழக்கூடிய பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும் பட்டியலின மக்களும் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள் என்பதையும் எடுத்துப் பேசினார்.
நிகழ்வின் இறுதியில் பலரும் நிகழ்ச்சியின் சிறப்பை, சிறப்பு ரையாளரின் உரையின் சிறப்பை பாராட்டி பேசினார்கள். நிகழ் வில் பங்கேற்று சிறப்பித்த முன்ன ணியினருக்கு இயக்க நூல்களை டாக்டர் சோம.இளங்கோவன் அன் புப் பரிசாக வழங்கினார். முடிவில் தோழர் கோதை நன்றி கூறினார்.