குன்றத்தூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி

Viduthalai
2 Min Read

அரசியல்

காஞ்சிபுரம்,ஆக.9 – குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் 2ஆம் கட்ட அகழ்வா ராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத் தூர் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட் சியில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி சென்னை வட்டார தொல்லி யல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வா ராய்ச்சிப் பணி தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அகழ்வா ராய்ச்சி மேற்கொண்டதில் அரிய வகை பொருட்களான கண்ணாடி மணிகள், வட்ட சில்கள், இரும் பாலான ஆயுதம், சுடுமண்ணால் ஆன பொம்மைகள். முத்திரை சீல், 2 தங்க அணிகலன்கள் மற்றும் பழைய கற்காலத்தில் பயன்படுத்திய கருவிகள் உள்ளிட்டவை கிடைத் தன.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 19ஆம் தேதி 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி தொடங் கிய நிலையில் தங்க ஆபரணத்தி லான சிறு தகடு. ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள், சுடுமன் கருவி, செப்புப் பொருட்கள், சுடு மண் பொம்மைகள், செப்பு வளை யங்கள் உள்ளிட்ட அரிய பொருட் கள் கிடைத்தன.

தற்போது அகழாய்வில் தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானை ஓடு, சுடுமண் பெண் உரு வம், சுடுமண் முத்திரை, உடைந்த சுடுமண் பொம்மை, குவளை, சுடு மண் கழுத்தணி, சூதுபவள மணி கள், இரும்பு மற்றும் செம்பு பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 800 பொருட்கள் கண்டறியப்பட் டுள்ளன.

இந்த கண்டுபிடிப்புகள் குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பா ளர் காளிமுத்து தெரிவிக்கையில், ‘வடக்குப்பட்டில் பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு கிடைத்திருப்பது மிகவும் முக்கிய கண்டுபிடிப்பு ஆகும். இந்த பானை ஓட்டில் “மத்தி” என்று மூன்று எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. இதுவரை வட தமிழ்நாட்டில் பட்டரைப்பெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கிடைத் துள்ளன. இதன் காலம் கி.மு. முத லாம் நூற்றாண்டாக இருக்கலாம் என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *