பெரியார் திடல் நூலகர் கி. கோவிந்தனுக்கு சிறந்த நூலகர் விருது அறிவிப்பு!

1 Min Read

சென்னை, ஆக. 17- மலர்க்கேணி ஆய்வுகள் சார்பில் வழங்கப்படும் சிறந்த நூலகருக்கான எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது இந்த ஆண்டு சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தின் நூலகர் கி.கோவிந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப் பினை வெளியிட்ட மணல் கேணி ஆய்வுக ளின் ஆசிரியரும், விழுப்பு ரம் நாடாளுமன்ற உறுப் பினருமான து.ரவிக்குமார்

செப்டம்பர் 5ஆம் தேதி விழா நடைபெறும் என் றும் நிகழ்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கி. கோவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டம் பெற் றவர். நூலக அறிவியல் துறையில் எம்.பில். பட்டம் பெற்று சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். 2003ஆம் ஆண்டு முதல் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் நூல கராகப் பணியாற்றி வருகிறார். 126 பி.எச்.டி. மாணவர்களுக்கும், 263 எம்.பில். மாணவர் களுக்கும் ஆய்வின் போது உதவியிருக்கிறார். இவர் தொடராக எழு திய “இந்தியாவில் நூல கங்களின் வரலாறும் வளர்ச்சியும்” என்னும் கட்டுரைத் தொடர் நூலகங்கள் பற்றிய சிறந்த ஆய்வு நூலாக வெளி வந்துள்ளது. இவ்விருது 2009ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது. இதுவரை நூலகர்கள் நாகேந்திரன், உத்திராடம், ராஜேஷ் தீனா, முனைவர் காமாட்சி ஆகியோர் இந்த விருதினைப் பெற்று உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *