சீனாவை நம்பி இருக்கும் இந்தியா மோடியின் சீன எதிர்ப்பின் லட்சணம் இதுதான்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக. 8- இந்தியாவின் மொத்த யூரியா இறக்குமதியில் கால்பங்கு சீனாவின் பங்களிப்பாக உள்ளது. மாநிலங்களவையில் 6.8.2024 அன்று எழுத்துமூலம் அளிக்கப்பட்ட பதில் ஒன்றின் மூலம் இத்தகவல் தெரிய வந்து உள்ளது.

ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் இது தொடா் பாக எழுத்துபூா்வ பதிலில் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உரத்தின் உற்பத்தியைவிட தேவை அதிகம் இருப்பதால் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. உரத் துறை மூலம் வேளாண்மை பயன்பாட்டுக்காக 2023-2024 நிதியாண்டில் மொத்தம் 70.42 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18.65 லட்சம் டன் (25 சதவீதத்துக்கு மேல்) சீனாவில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்டுள்ளது.

பாஸ்பேட் மற்றும் பொட் டாஷ் உரம் 106.53 லட்சம் டன் இறக்குமதியாகியுள்ளது. இதில் 22.58 லட்சம் டன் சீனாவில் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் யூரியா உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.இந்தியாவில் சராசரி உரப் பயன் பாடு ஒரு எக்டோ் விவசாய நிலத்துக்கு 140 கிலோவாக உள்ளது. அதே நேரத்தில் பஞ்சாபில் மட்டும் உரப் பயன்பாடு எக் டேருக்கு 247.61 கிலோவாக உள்ளது.

நாட்டின் மொத்த உரப்பயன்பாட்டில் 9 சதவீதம் பஞ்சாபுடையதாக உள்ளது.பஞ்சாபில் பாஸ்பேட் உரம் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் புற்றுநோய் பரவுகிறது என்பது குறித்து எவ்வித புள்ளி விவரமும் தங்களிடம் இல்லை என்று பஞ்சாப் அரசு கூறிவிட்டது என்று அமைச்சா் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

இவர்களின் சீன எதிர்ப்பு எல்லாம் மக்களை ஏமாற்ற மட்டுமே! பாகிஸ்தானில் இருந்து வெங்காயம், சீனாவிலிருந்து உரம் போன்றவற்றை அதானிகள் மூலம் தாராளமாக இறக்குமதி செய்துலாபம் பாக்கிறார்கள் என்பது மட்டும் உண்மையே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *