அண்ணாமலையின் பாதயாத்திரையில் பாஜகவினர் வைத்த பேனர்- சங்கிகளின் சங்கமமாம்

Viduthalai
1 Min Read

விளாத்திகுளம், ஆக 13  விளாத்திகுளத்தில் அண்ணாமலை  நடைபயணம் மேற்கொண்ட நிலையில் பாஜ கட்சியினரே ‘சங்கிகளின் சங்கமம்’ என பதாகை வைத்து வரவேற்றனர். 

தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளளார். அவர் நேற்றைய (12.8.2023) நடைபயணத்தை தூத்துக்குடி மாவட் டம், விளாத்திகுளம் அருகே கமலாபுரம் பஞ்சாயத்து, சுப்பிரமணியபுரம் விலக்கில் இருந்து துவங்கினார். இதையொட்டி விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன் பாஜவினர் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘சங்கிகளின் சங்கமம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே எதிர்க்கட்சியினர் பாஜவினரை சங்கிகள் என்று விமர்சித்து வரும் நிலையில் ‘சங்கிகளின் சங்கமம்’ என்று கட்சியினரே பதாகை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *