பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
3 Min Read

திருச்சி, ஆக. 7- பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் 3.8.2024 அன்று மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். வருகை தந்த அனைவரையும் பொதுச் செயலாளர் வி.மோகன் வரவேற்று பேசினார். இந்த கூட்டம் கூட்டப் பட்டதன் நோக்கம் பற்றி மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தன்னுடைய முன்னுரையில் எடுத்துரைத்தார்.
டிசம்பர் 28 , 29 திருச்சியில் நடைபெற இருக்கும் பன்னாட்டு பகுத்தறிவாளர் – நாத்திகர் – மனிதநேயர் – சுதந்திர சிந்தனையாளர் மாநாடு பற்றி விரிவான திட்ட அறிக்கையை விளக்கிப் பேசி இது தொடர்பான கருத்துகளை வருகை புரிந்தவர்களிடம் தெரிவிக்கக் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் தஞ்சை பெரியார் கண்ணன், நீடாமங்கலம் கல்யாண சுந்தரம், மன்னார்குடி கோபால், மண்ணச்சநல்லூர் முத்துசாமி, மன்னார்குடி கோவி. அழகிரி, நீடாமங்கலம் த. வீரமணி, லால்குடி வீ.அன்பு ராஜ் ஆகியோர் தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்.
திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் ,திருச்சி மாவட்ட திராவிட கழக செயலாளர் இரா மோகன்தாஸ், திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் லெ. மதிவாணன், திருச்சி மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் மன்னர் மன்னன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்கள் குறிஞ்சிப் பாடி பெரியார் செல்வம், நீடாமங்கலம் ரமேஷ், தஞ்சை கோபு. பழனிவேல், பொன்ன மராவதி சரவணன், அரியலூர் தங்க. சிவமூர்த்தி, ஆத்தூர் மாயக்கண்ணன், நாமக்கல் இளங்கோ, காளையார் கோவில் முத்துக்குமார், லால்குடி சண்முகம், பாண்டிச்சேரி ஆடிட்டர் ரஞ்சித் குமார் , நாகை முத்துகிருஷ்ணன், மதுரை பேரா. மகேந்திரன், புதுச்சேரி தலைவர் நடராஜன், ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.
தொடர்ந்து மாநில துணைத் தலைவர் ராயகிரி கே.டி.சி. குருசாமி ,சென்னை வேல்.சோ. நெடுமாறன் ஆகியோர் மாநாடு எப்படி நடைபெற வேண்டும் என்பதும் அதற்கு தங்களுடைய ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் எடுத்து கூறினார்கள்.

திராவிடர் கழகம்

அதனைத் தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர் பேராசிரியர் கண்மணி ஆகியோர் மாநாட்டில் இடம் பெறவேண்டிய நிகழ்வுகள் பற்றிய தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்.
தொடர்ந்து மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, பொதுச் செயலாளர் ஆத்தூர் தமிழ் பிரபாகரன், பொதுச் செயலாளர் சென்னை வெங்கடேசன், ஊடகத்துறை தலைவர் மா.அழகிரி சாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா. நேரு ஆகியோர் தங்களது கருத்துகளையும் மாநாட்டு செயல்முறைகளையும் செய்ய வேண்டிய செயல்பாடுகளையும் பற்றிய உரை நிகழ்த்தினார்கள்.

மாநில திராவிடர் கழக தொழில் நுட்ப குழுவின் ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம் இந்த மாநாடு எப்படி இருக்க வேண்டும்என்றும், மாநாட்டு பொறுப்பு ஏற்றுள்ள பகுத்தறிவாளர் கழகம் எப்படி செயல்படும் என்பதையும் எடுத்துரைத்தார்.
அனைவரது கருத்துகளையும் தொகுத்து மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா தமிழ்ச்செல்வன் முடிவாக வழங்கினார். பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டிகள், பன்னாட்டு மாநாடு செயல்பாடுகள், பெரியார் 1000, ஆகியவை பற்றிய செய்திகளை அறிவித்தார்கள்.

நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக துணைப்பொதுச்செயலாளர் இளவரசி சங்கர் பதவி உயர்வு பெற்றமைக்கு பாராட்டு தெரிவித்து பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்தார்.
புதிதாக பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த திருவெறும்பூர் பரமசிவத்திற்கு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்தார்.

நிரல், திரள், பொருள் பற்றி திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் எடுத்துக்கூறி, மாநாடு நடைபெற தான் இதுவரை எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள், இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விரைவாக செய்ய வேண்டியதன் அவசியம், நிகழ்ச்சி எப்படி எல்லாம் இருக்கும் என்பதை எல்லாம் கோடிட்டு காட்டினார்கள் . எல்லோருடைய உழைப்பும் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் எடுத்துச் சொன்னார்கள்.
நிகழ்வை மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் ஒருங்கிணைத்தார்.
இறுதியில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *