அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடக்கம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஆக.2 தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நேற்று (1.8.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ னம் கடந்த 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் வெளிநாடுகளில் வேலைசெய்ய விரும்புவோருக்கு தேவையான பணிகளை செய்து வருகிறது. ஒன்றிய அரசின் குடிபெயர்வோர் சட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டு வெளிநாட்டு வேலைகளில் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் www.omcmanpower.com என்ற இணையதளம் தனியார் டொமைனில் இருந்து தற்போது தமிழ்நாடு அரசின் டொ மைனுடன் www.omcmanpower.tn.gov.in என்ற புதிய இணையதளமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, வெளிநாடு செல்ல விரும்புவோர் இந்த புதிய இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *