சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
2 Min Read

சேலம், ஜூலை 31- சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 28.7.2024 அன்று காலை 11.30 மணியளவில் சேலம் அம்மா பேட்டை சவுண்டம்மன் கோவில் தெரு, வீரமணி ராஜு இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று மேட்டூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கோ. வி. அன்புமதி வர வேற்புரை ஆற்றினார்.
இக்கலந்துரையாடல் கூட்டத் திற்குத் தலைமை ஏற்று சேலம் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ தலைமை உரை ஆற்றினார் .

நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா. பாலு, தலை மைக் கழக அமைப்பாளர் அ .சுரேஷ், ஆத்தூர் மாவட்டக் காப்பாளர் விடுதலைச் சந்திரன், ஆத்தூர் நகர கழகத் தலைவர் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் க. கமலம், பகுத்தறிவாளர் கழக சேலம் மாநகரத் தலைவர் செ.வாசுகி, பகுத்தறிவாளர் கழக சேலம் மாநகர செயலாளர் கோ. கல்பனா,சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ சேகர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப. வேல் முருகன், பகுத்தறிவாளர் கழக ச.வினோத்குமார்,இரா புகழேந்தி, கழக சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம், கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர் .பின் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சேலத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு வாகன பிரச்சார பேர ணிக்கு உணவு உதவிகள் புரிந்த சேலம் பகுத்தறிவாளர் கழக மாவட் டத் தலைவர் வீரமணி ராஜூக்கு பொதுக்குழு உறுப்பினர் க.கமலம் மரியாதை செய்தார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன் கூட்ட பொருண்மைகள் குறித்து தொடக்க உரை ஆற்றினார்.

மாநில பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் (ஆசிரியர்கள் பிரிவு) வா.தமிழ் பிரபாகரன் உரையில், வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூன்று மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கிடையே பகுத்தறிவாளர் கழகம் வழங்கி உள்ள தலைப்பில் சிறப்பாக பேச்சுப் போட்டி நடத்திட வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் வழங்கினார். இதில் வெற்றி பெறும் மாணவர்களை சென்னையில் செப்டம்பர் 7, 8 தேதிகளில்நடைபெறும் பேச்சுப்போட்டிக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது குறித்து அறிவுரை வழங்கினார்.

பகுத்தறி வாளர் கழகத்தில் அதிக உறுப்பினர் சேர்க்கை நடத்துதல் குறித்தும் மேனாள் ஆசிரியர் அணி தோழர் களை பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்புகள் வழங்கி பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்துதல் குறித்தும் பேசினார். வரும் டிசம்பர் 28, 29 தேதிகளில் திருச்சியில் நடைபெறும் பன்னாட்டு நாத்திகர் மாநாடு வெற்றி பெற பகுத்தறிவாளர் கழகம் செய்ய வேண்டிய கட மைகளை கருத்துரையாக வழங்கினார். பன்னாட்டு நாத்திகர் அமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வனுக்கு அவர்களுக்கு இக்கலந்துரையாடல் கூட்டத்தின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின் பொருண்மைகள் அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம் நன்றியுரை கூற இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *