நிலவில் இறங்கத் தயாராகும் நிலவுக்கலன் சந்திரயான் 3

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.16 சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரி வித்துள்ளது. நான்காவது முறையாக நிலவின் சுற்றுப் பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 

அண்மையில் நிலவின் சுற்றுப் பாதைக்குள் சந்திரயான்-3 விண் கலம் நுழைந்து, பயணத்தை தொடங்கியது. படிப்படியாக சுற்றுப் பாதையின் உயரம் குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 153ஜ்163 கி.மீ என சுற்றுவட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நாளை (ஆக.17) விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்படுகிறது. வரும் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரை யிறங்க உள்ளது. சந்திரயான்-3 விண் கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக் கெட் மூலம் சிறீஅரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மய்யத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணி கள் தற்போது மேற்கொள்ளப்பட்டன. 

சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவுக்கு மிக அருகில் சுற்றுப்பாதையில் பயணித்து வரு கிறது. வரும் 23 ஆம் தேதி சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *