பொம்மிடியில் நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணம்

1 Min Read

பொம்மிடி, ஜூலை 25- அரூர் கழக மாவட்டம், 15.7.2024ஆம் தேதி அன்று பொம்மிடி ரயில் நிலையம் முன் 12 மணி அளவில் நீட் எதிர்ப்புப் பரப்புரை பயண கூட்டம் நகரத் தலைவர் இரா.ஆனந்தன் தலைமையில். நகர துணை செயலாளர் பிரகாசம், திமுக கவுன்சிலர் கோகுல், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் சண்முகம், தமிழ்நாடு பௌத்த அறநிலையாளர் சங்க தலைவர் தம்மச்சுடர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற தலைவர் சாந்தி புஷ்பராஜ் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து திராவிடர் கழகம் வெளியிட்ட 100 புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.
பரப்புரைப் பயண நோக்கங்களை பற்றி மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி தொடக்க உரையாற்றினார்.

நீட் தேர்வு முடிவுகள் குறித்தும், அதனால் தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகள் மரணம் அடைந்ததை நினைவூட்டியும், அதனால் ஏற் படும் பாதிப்புகள், நீட் தேர்வு மோசடிகள் குறித்து கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட மாண வர் கழகத் தலைவர் சாய்குமார், வேப்பிலைப்பட்டி தோழர்கள் இ.சமரசம், சூர்யா, திருவள்ளுவன், அம்மாபேட்டை மணி, மகளிர் அணி தோழர்கள் கல்பனா, உமா, பில்பருத்தி மாதையன், சிவாஜி, மற்றும் திமுக, விடுதலை சிறுத் தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியினர், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *