திருப்பத்தூர் மாவட்டத்தில் – “நீட் தேர்வு ரத்து ஏன்?” புத்தகம் ஏராளமாக விற்பனை

1 Min Read

திருப்பத்தூர், ஜூலை 23– நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் ஜூலை 13, 14இல் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த போது நீட் தேர்வு ரத்து ஏன்? என்ற புத்தகம் ஏராளமாக விற்பனை ஆனது. அதை தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.

வினோத் – தி.மு.க. கவுன்சிலர், டி.சி.கார்த்திக் தி.மு.க. மாவட்ட மாணவர் கழக தலைவர், வே.அன்பு – மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் – எஸ்.ஆர்.ராஜேந்திரன் நகர செயலாளர், ஏ.டி.ஜி. இந்திரஜித் – கழக பொறுப்பாளர், குரிசல் மணி – அம் பேத்கர் பெரியார் மார்க்ஸ் பதிப்பகம், ஆ.ப.செல்வராஜ் – விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர், அண்ணா சரவணன் – மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர், பெ.கலைவாணன் – மாவட்ட செயலாளர், வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர் ஆகியோர் தலா ரூ.500 கொடுத்து புத்தகம் பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *