பன்னீர்ச்செல்வி மறைவு – கழகத் தோழர்கள் மரியாதை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, ஜூலை 20- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் காளாப்பூர் பெரியார் என அழைக்கப்பட்ட பழனியாண்டி அவர்க ளின் பெயர்த்தியும், தன் பெண் மக்கள் அய்ந்து பேருக்கும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த INA சின்னையா அவர்களின் மகளும் சீரிய பகுத்தறிவாளர் விடுதலை நாளிதழின் நீண்ட கால வாசகரும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான அழ. இலட்சுமணன் அவர் களின் துணைவியார் ஜாதி ஒழிப்பு வீராங்கனை இறுதி வரை பெரியார் கொள்கையே என் வாழ்க்கை முறை என வாழ்ந்துவந்தவருமான மானமிகு சி.பன்னீர்ச் செல்வி (வயது 74)அவர்கள் நேற்று 19.7.2024 வெள்ளி அன்று இயற்கை எய்தினார்.
அவருக்கு அன்புச்செழியன், இளஞ்செழியன், மணி மேகலை ஆகிய மக்கள் உள்ளனர். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று (20.7.2024) சனிக்கிழமை சிங்கம்புணரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது
சிவகங்கை மாவட்ட கழக தலைவர் இர.புக ழேந்தி, மாவட்ட செயலாளர் காளாப்பூர் பெ.ராசாராம், மாவட்ட துணைத்தலைவர் செ.தனபாலன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *