ஈரோடு மாவட்டம் – பவானி
திண்டுக்கலில் பரப்புரை
திண்டுக்கல், ஜூலை 19 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 13.7.2024 அன்று மதியம் ஒரு மணி அளவில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மு.ஆனந்த முனிராசன், மாவட்ட செயலாளர் கே.ஆர் காஞ்சிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார். மு.நாகராசன்,தி.கா.செல்வம்,த.கருணாநிதி, இரா.சக்தி சரவணன், பாண்டி, சக்திவேல், ச.பொன்ராஜ், கோ. சரவணன், பழ.நாகராஜ், இரா.நாராயணன், மாணிக்கம், பொன்ராஜ், செந்தில்குமார், மகேஷ் ராஜா, ந.சின்னசாமி, பானுமதி, பழனிச்சாமி, வேல்முருகன், நாகலட்சுமி,குழந்தைவேல், சூர்யா, மகேஷ் ராஜா உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்கத் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.