நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சாரப் பயண குழுவிற்கு மத்தூரில் 100-க்கும் மேற்பட்ட கழகக் கொடிகள் கட்டி வரவேற்பு

Viduthalai
4 Min Read

கிருட்டினகிரி, ஜூலை 19- கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் இருசக்கர வாகனப் பரப்புரை பயண பிரச்சாரக் குழுவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலிறுத்தி திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகம் சார்பில் இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சாரப் பயண 3-ஆம் குழுவிற்கு மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் தலைமையில் சொற்பொழிவாளர் திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் கோ.வேலு, தலைமை கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன் உள்ளிட்ட பய ணக் குழுவினர் கிருட்டினகிரி மாவட் டம் மத்தூர் ஒன்றியம் எல்லை காக்கங் கரையில் வருகைக்கு மத்தூரில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கழக கொடிகள் கட்டி சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன் தலைமையில், மாநில ப.க.துணைப்பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், தொழிலாளரணி மாவட்டத்தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.சிலம்பரசன், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம் முன்னிலையில், மாநில மாணவர் கழக நிர்வாகி ச.மணிமொழி,மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி, ஒன்றிய செயலாளர் வி.திருமாறன்,ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. பழனி, செயலாளர் மு.செயரட்சகன், துணைத்தலைவர் பொன். சிவக்குமார், செ. ஜானகிராமன், செ.இராம செயம், ஞானசேகரன், மகளிரணி உண்ணாமலை, முருகம்மாள், தொழிலாளரணி சின்ராஜ், உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தோழர்களும் பங்கேற்று நீட் ஒழிப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணக் குழுவிரை சிறப்பாக வரவேற்றனர்.
முன்னதாக பாண்டவர் குட்டையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்பட்டது.
நடுப்பட்டியில் சுயமரியாதைச் சுடரொளி அரங்க. இரவி நினைவு கொடிகம்பத்தில் மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி கழக கொடியினை ஏற்றினார்.

திராவிடர் கழகம்

எகிலேரியான் கொட்டாய் பகுதியில் மாவட்டத்தலைவர் கோ.திராவிடமணி கழகக் கொடியை ஏற்றினார். மத்தூரில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நீட் தேர்வு மோசடிகளை விளக்கி பிரச்சாரக் கூட்டம் 14/07/2024 மாலை 4.00 மணியளவில் மத்தூர் பேருந்துநிலையம் பெரியார் சிலையருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி நீட் தேர்வின் மோசடிகளை விளக்கியும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் அணுகுண்டுதான் நீட் தேர்வு என்பதையும், இதனால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக கழக துணைப்பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனிக்கு, மத்தூர் தி.மு.க.ஒன்றியச் செயலாளர் பொன்.குண.வசந்தரசு, மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி, மத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்து, கழக துணைப்பொதுச்செயலாளரிடம் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்க எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பெரும் பயணம் ஏன்? என்ற நூல்களை உரிய தொகையினை கொடுத்து பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தி.மு.க. ஒன்றியதுணை செயலாளர் தனசேரன், வட்டார காங்கிரஸ் தலைவர் தனஞ்செயன், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட ப.க.துணைத்தலைவர் மு.வேடியப்பன் ஒன்றிய கழகத் துணைத்தலைவர் சா.தனஞ்செயன் நன்றி கூறினார்.

கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளில் பிரச்சார குழுவினருக்கு வரவேற்புபள்ளியின் நிறுவனர் மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் சிந்தை மு.இராசேந்திரன் பிரச்சார குழுவினரை வரவேற்று, பள்ளியிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் சே. மெ. மதிவதனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணம் ஏன்? என்ற ரூ 2000/- மதிப்பிலான புத்தகங்களை கழக துணைப் பொதுச்செயலாளரிடம் பள்ளியின் நிறுவனர் சிந்தை மு.இராசேந் திரன் பெற்றுக்கொண்டார். உடன் காவேரிப்பட்டணம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வீரமலை வி.சி.கோவிந்தசாமி மற்றும் பள்ளியின் பணியாளர் உடனிருந்தனர்.

மத்தூர் ஒன்றியம் சாம்பல்பட்டியில் இருசக்கர வாகனப் பரப்புரை பயண குழுவினரை வரவேற்று பிரச்சாரக் கூட்டம் திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் வ. ஆறுமுகம் தலைமையில் விசிக செய்தி தொடர்பாளர் சங்க தமிழ் சரவணன் ஏற்பாட்டில் பிரச்சாரக் குழுவினரை வரவேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, பழ.வெங்கடாசலம், தி.மு.க.சாகுல்அமீது, சேகர், சங்கர், கழக மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராசன், ஊற்றங்கரை ஒன்றியத்தலைவர் அண்ணா அப்பாசாமி, செயலாளர் செ.சிவராஜ், ஒன்றிய ப.க.தலைவர் இராம.சகாதேவன், ப.க.சித.அருள், விசிக அண்ணாமலை, ஜெய்ந் உள்பட திமுக., காங்கிரஸ், விசிக., சிபிஅய்(எம்)., சிபிஅய் உள்ளிட்ட கட்சிகளிள் பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாக கலந்துகொண்டு பிரச்சாரக் குழுவினரை சிறப்பாக வரவேற்றனர். நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணம் ஏன்? என்ற புத்தகத்தை வி.சி.க.மாவட்ட நிர்வாகி சங்க தமிழ் சரவணன் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனியிடம் உரிய தொகையை வழங்கி பெற்றுக்கொண்டார். நிறைவாக மத்தூர் ஒன்றியச்செயலாளர் வி.திருமாறன் நன்றி கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *