இதுதான் பா.ஜ.க.! பிரதமர் பக்கோடா விற்கச் சொன்னார்! கல்லூரியை தொடங்கி வைத்த சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினர் பஞ்சர் கடை வைக்கச் சொல்கிறார் : காங்கிரஸ் கடும் கண்டனம்

1 Min Read

போபால், ஜூலை 17- ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த நாளிலி ருந்து, பாஜக தேர்தல் வாக்குறுதியாக சொன்ன ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கடந்த 10 ஆண்டுகளில் அளிக்கப்படவில்லை. வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பட்ட தாரிகள் பக்கோடா விற்றுப் பிழைக்கலாம் என்றவர் பிரதமர மோடி. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் கல்லூரி ஒன்றைத் தொடங்கிவைத்து பேசிய மத்தியப்பிரதேச மாநில பாஜக சட்டமன்ற உறுப்பி னர் பஞ்சர் கடை வைத்து வாழ்க்கையை நடத்தலாம் என்று கூறியுள்ளார்.
நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில் பிரதமா் சிறப்புக் கல்லூரி (பிஎம் காலேஜ் ஆப் எக்சலன்ஸ்) என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியின் திறப்பு விழா நடந்தது.

இதில் அந்த தொகுதி யின் பா ஜனதா எம் எல் ஏ பன்னாலால் ஷக்யா பங்கேற்று பேசினார். அப்போது அவர், “இங்கு பிரதமா் சிறப்புக் கல்லூரியைத் தொடங்கியுள்ளோம். மாணவா்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றை மட்டும் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரியில் படித்து கிடைக்கும் பட்டத்தால் ஒன்றும் நடந்துவிட போவதில்லை. இதற்கு பதிலாக மோட்டாா் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடை வைத்தால் உங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்” என்றார்.
மாணவர்கள் படித்து பட்டம் பெறுவதற்கு பதில் பஞ்சர் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என பா ஜனதா சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா ஜனதா சட்டமன்ற உறுப்பினரரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “முன்னதாக, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க பக்கோடா விற்க கூறினார் பிரதமர் மோடி. இப்போது அவரது சட்டமன்ற உறுப்பினர் கல்லூரி பட்டங்களை பயனற்றவை என்றும், பஞ்சர்கடை திறக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சொல்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *