திருமண வரவேற்பு விழா – 18.11.2023

1 Min Read

மேட்டுப்பாளையம் திராவிடர் கழக தோழர் ந.பத்ம நாபன்-அன்னகாமாட்சி இணையர் மகன் மருத்துவர் அ.ப.தமிழரசன்,  சாத்தூர் (லேட்) முருகேசன், பஞ்சவர்ணம்  இணையர் மகள் மு.விஜயலட்சுமி,  காவல் துணை கண்காணிப்பாளர் (உதகை-நீலகிரி மாவட்டம்) ஆகியோரின் திருமண வரவேற்பு விழா மேட்டுப்பாளையம் திருமண மண்டபத்தில் 18.11.2023 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. 

ஈரோடு மாவட்ட கலந்துரையாடல்

19.11.2023 காலை 10.00 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம். மாவட்டத் தலைவர் இரா.நற்குணன் தலைமையில் நடைபெறவுள்ளது. பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாள் டிசம்பர் 2. முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக அவர் விரும்புகிற விடுதலை சந்தா சேர்ப்பு. கருத்துரை: தலைமைக் கழக அமைப்பாளர் த.சண்முகம். குறிப்பு: இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் ப.க.தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். இப்படிக்கு: இரா. நற்குணன் (மாவட்ட தலைவர்), மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *