பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் தொடக்க ஆண்டில் (First Batch) பயின்ற மாணவிகள், 43 ஆண்டுகளுக்குப் பிறகு, ’தலைப்பிள்ளைகளின் கூடுகை – நட்புக்கு வயது 43’ என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் கூடிக்களித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மேனாள் மாணவர்களுடன் மிகுந்த உற்சாகத்துடன், 43 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பழைய நினைவுகளை பேசி மாணவர்களை வியக்க வைத்தார். தொடர்ந்து அனைவரும் ஆசிரியருடன் குழு படம் எடுத்துக்கொண்டனர். (பெரியார் திடல், 15.08.2023)