கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

9.7.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீட் வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளது. மறுதேர்வு தேவைப்படலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.
* மணிப்பூரில் எதுவும் மாறவில்லை; பிரதமர் மணிப்பூர் மக்களை சந்திக்க வேண்டும் என மணிப்பூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஒன்றிய அரசின் புதிய கிரிமினல் சட்டங்கள் குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
* சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி – ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக் கொடுப் போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை பெருகர காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஹத்ராஸில் ஏற்பட்ட நெரிசலில் 121 பேர் இறந்ததற்கு போலே பாபா காரணம் என நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு
தி இந்து:
* ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி.. ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! 4 வீரர்கள் பலி. ஜம்மு காஷ்மீர் பேரழிவுக்கு மோடி அரசுதான் காரணம், மல்லிகார்ஜூனா கார்கே கண்டனம்.
தி டெலிகிராப்:
* தேசிய தேர்வு முகமை செயல்பாடு குறித்து அய்டி மற்றும் கல்வி அமைச்சக அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சகம் ஆய்வு.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *