சோழிங்கநல்லுார் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
சோழிங்கநல்லூர், ஜூலை 6 திராவிடர் கழக மாணவர் கழக மற்றும் இளைஞரணி இணைந்து நடத்தும் நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணம் மற்றும் இருசக்கர ஊர்திப் பேரணி யினை – வரவேற்பது தொடர்பாகவும் மாவட்டகழகத்தின் வளர்ச்சி தொடர் பாகவும் 30.06.2024 அன்று சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டமானது, நங்கநல்லூர் தமிழினியன் தலைமையில், மடிப்பாக்கம் விடுதலை நக ரில் பகுத்தறிவாளர் கழகத் தலை வர் ஆனந்தன், அவர்களது அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்புப் பார்வையாளராக தலைமைக்கழகத்தின் சார்பில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கலந்துகொண்டோர்
மாவட்டக் கழக காப்பாளர் நீலாங்கரை ஆர். டி. வீரபத்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சே. சுரேஷ், உத்தமன் ராஜ், மாவட்டச் செயலாளர் ஆ.விஜய், மடிப்பாக்கம் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஜெயராமன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆனந்தன், மாவட்ட மகளிரணி தலைவர் ஜெ.தேவிசக்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம், மாவட்ட தொழிலாளரணி மணிகண்டன், மடிப்பாக்கம் பகுதி கே.ராஜா, மடிப்பாக்கம் பகுதி வி.பழனி
தீர்மானங்கள்
வேளச்சேரியில் வரவேற்பு அளித்தல்.
விடுதலை நகரில் வரவேற்பு மற்றும் மேடை நிகழ்ச்சி நடத்துதல்
மாவட்டம் முழுவதும் நீட் எதிர்ப்புப் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம் நடத்தப்படும்.
நிறைவாக நீட் எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டம் கழக துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களின் தலைமையில் நடத்துவது என கமிட்டியில் தீர்மானிக்கப்பட்டது.