பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க தொடக்க விழா அனைத்துக் கட்சி சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, ஆக. 23 – தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு  தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கம் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்துக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகை யில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ வரும் ஆகஸ்ட 25 முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

இந்நிலையில், காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத் துள்ளார்.

தற்போது, இந்தத் திட்டத் தினை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு கேட்டு, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் 

22.-8.-2023 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த 27-.7.-2022 அன்று வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளி களைச் சேர்ந்த சுமார் 1 இலட் சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயனடைந்து வருவதாகவும் குறிப் பிட்டுள்ளார்.

இந்தியாவில் வேறெந்த மாநி லத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய், ஊரகப் பகுதிகளில் உள்ள  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும்   31,008 அரசு தொடக்கப் பள்ளி களில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.75 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில் இந்த ஆண்டில் விரிவுபடுத்தி கடந்த 7-.6.-2023 அன்று ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், முதற் கட்டமாக நடைமுறைப்படுத் தப்பட்ட பள்ளிகளில் காணப் பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தச் சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட இருக்கும் இத்திட்டத்தினை வருகிற 25.-8.-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில், தான் தொடங்கி வைக்க உள்ளதா கவும், ஒவ்வொரு மாவட்டத் திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்தத் திட்டத் தினைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தச் சீர்மிகு திட்டத்தினைத் தொடங்கி வைத்து சிறப்பித்திட தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *