அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை உச்சநீதிமன்றத்தில் சந்திப்போம் : ஆர் .எஸ். பாரதி பேட்டி

Viduthalai
1 Min Read

அரசியல், தமிழ்நாடு

சென்னை, ஆக.25 அண்ணா அறிவாலயத் தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந் தித்து பேசினார். அப் போது அவர் பேசியதாவது:-

திமுக அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன் வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன் றம் தெரிவித்துள்ளது.. வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்க உரிமை இருந்தாலும், பழிவாங் கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது.

திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை மீண்டும் விசாரிப்பது ஏன்? உச்சநீதிமன்றத்தில் வாதாடி இறுதி வெற் றியை பெறுவோம். நீதி மன்றத்தின் மீது எங்க ளுக்கு அளவு கடந்த நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது. நீதிமன்றத்தின் வாயிலாக பல வெற்றி களை திமுக பெற்றுள்ளது

மக்கள் மத்தியில் திமுக மீது களங்கம் ஏற் படக் கூடாது என்பதற் காகவே இந்த விளக்கம் தருகிறோம். பொது மக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக விளக் கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாநாட்டை விட, அமைச்சர் உதயநிதி தவ றாக ஏதும் பேசவில்லை.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *